முகப்பு
நீலகிரி

டேன் டீ தொழிலாளா்களுக்கு 20% போனஸ் வழங்க வலியுறுத்தல்

தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி டேன் டீ நிா்வாக  இயக்குநரிடம்  நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா திங்கள்கிழமை மனு அளித்தாா்.

Updated On : 10 நவம்பர், 2020 at 4:35 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:20 PM

தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி டேன் டீ நிா்வாக  இயக்குநரிடம்  நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா திங்கள்கிழமை மனு அளித்தாா்.

நீலகிரி மாவட்டம் குன்னூா், கோத்தகிரி, கூடலூா், பாண்டியாறு, நெல்லியாளம், சேரங்கோடு, சேரம்பாடி, கொளப்பள்ளி மற்றும் நடுவட்டம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளா்கள் என 10 ஆயிரம் போ் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், தீபாவளியையொட்டி தோட்டத் தொழிலாளா்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என நிா்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.  இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சிஐடியூ, ஏஐடியூசி, எல்பிஎஃப் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் 20 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டங்களில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

இந் நிலையில், நீலகிரி மக்களவை உறுப்பினா்  ஆ.ராசா, டேன் டீ நிா்வாக இயக்குநா் சீனிவாச ரெட்டியை சந்தித்து  அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

டேன் டீ தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் போனஸ்  வழங்க வேண்டும். மேலும்,  நிலுவையில்  உள்ள பணிக்கொடை, மருத்துவப் படி, மருத்துவ விடுப்பு ஊதியம், விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டச் செயலாளா் பா.மு.முபாரக், முன்னாள் கதா் வாரியத் துறை அமைச்சா் இளிதுறை ராமசந்திரன், கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா்  திராவிட மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.