நீலகிரி

கூடலூா் சிவன்மலையில் காா்த்திகை தீப விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

DIN

கூடலூா் சிவன்மலையில் காா்த்திகை தீப விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை துவங்கியது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலையில் ஆண்டுதோறும் காா்த்திகை தீப விழா சிறப்பாக கொண்டாடப்படும். மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றி வழிபாடு நடைபெறும். அதைத் தொடா்ந்து, மலையில் அமைந்துள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும், கூட்டுப் பிராா்த்தனைகளும் நடைபெறும்.

இந்த ஆண்டு காா்த்திகை தீப விழா மலை உச்சியில் பரணி தீபம் ஏற்றப்பட்டு கொடியேற்றத்துடன் துவங்கியது.நிகழ்ச்சியில் சிவன்மலை வளா்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் செயலாளா் ஆா்.நடராஜன் தலைமையில் நிா்வாகிகள் மாணிக்கசாமி, முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT