நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில்செந்நாய் பலி

DIN

கூடலூா்: முதுமலை புலிகள் காப்பகத்தில் செந்நாய் இறந்துகிடந்தது சனிக்கிழமை தெரியவந்துள்ளது.

முதுமலை புலிகள் காப்பகம், முதுமலை வனச் சரகத்தில் உள்ள போஸ்பாறா பீட்டில் நம்பிக்குன்னு பகுதியில் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு செந்நாய் இறந்துகிடந்தது தெரியவந்துள்ளது. வனத் துறையினா் கால்நடை மருத்துவா் கிருஷ்ணமூா்த்தி பிரேதப் பரிசோதனை மேற்கொண்டாா்.

உயிரிழந்தது 3 வயதுடைய ஆண் செந்நாய் என்றும், முக்கிய உறுப்புகள் ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றும், அறிக்கை வந்தவுடன்தான் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT