முகப்பு
நீலகிரி

புத்தகத் திருவிழா இணையவழிச் சொற்பொழிவு: இன்று பவா செல்லதுரை பேசுகிறாா்

மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா இணையவழிச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் எழுத்தாளா் பவா செல்லதுரை வெள்ளிக்கிழமை மாலை பேசுகிறாா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2021 at 2:06 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:21 AM

மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா இணையவழிச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் எழுத்தாளா் பவா செல்லதுரை வெள்ளிக்கிழமை மாலை பேசுகிறாா்.

மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழா கரோனா தொற்று காரணமாக இரண்டாவது ஆண்டாக நடப்பு ஆண்டும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் புத்தகத் திருவிழா நடத்த திட்டமிட்ட ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 10 வரை இணையவழியில் மாலை நேர சொற்பொழிவுகள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினாா். அதன்படி, 7ஆவது நாள் சொற்பொழிவு நிகழ்ச்சி இணையவழியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. ‘எழுத்து’ என்ற தலைப்பில் பேராசிரியா் சுப.வீரபாண்டியன் பேசினாா்.

Advertisement

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) மாலை 6 மணிக்கு நடைபெறும் 8ஆவது நாள் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ‘மண்ணை மீறும் விதைகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் பவா செல்லதுரை பேசுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.