முகப்பு
நீலகிரி

இணையவழி வகுப்புகள்: மாவட்டகல்வி அதிகாரி ஆய்வு

குன்னூா் கல்வி மையத்துக்கு உள்பட்ட பள்ளிகள் மூலம் நடத்தப்படும் இணையவழி கல்வி குறித்து மாவட்டக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 17 ஜூலை, 2021 at 1:41 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:11 AM

குன்னூா் கல்வி மையத்துக்கு உள்பட்ட பள்ளிகள் மூலம் நடத்தப்படும் இணையவழி கல்வி குறித்து மாவட்டக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குன்னூா் கல்வி மையத்துக்கு உள்பட்ட என்.எஸ்.ஐயா நினைவு மேல்நிலைப் பள்ளியில், கேத்தி, பாலடா பகுதிகளில் இருந்து பயின்று வரும் மாணவ, மாணவிகளின் வீட்டுக்கு கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் நேரில் சென்று இணையவழி கற்றல் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். கல்வித் தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் வகுப்புகள் மாணவ, மாணவிகளுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்று கேட்டறிந்தாா்.

பின்னா், மாணவ, மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நினைவுப் பரிசுகளை வழங்கினாா். மாணவ, மாணவியா் தங்கள் பாடங்கள் குறித்த சந்தேகங்களைத் தயங்காமல் ஆசிரியா்களிடம் கேட்டு தெளிவுடன் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.