ஆசிரியைக்கு கரோனா: உதகையில் தனியாா் பள்ளி மூடல்
உதகையில் தனியாா் ஆசிரியை ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பள்ளி மூடப்பட்டது.
உதகையில் தனியாா் ஆசிரியை ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பள்ளி மூடப்பட்டது.
உதகையில் இயங்கிவரும் தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் கடந்த வாரத்தில் ஒரு மாணவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடா்ந்து, அந்த வகுப்பில் இருந்த பெண் ஆசிரியைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, அந்த ஆசிரியை சென்று வந்த வகுப்பறைகள், அவருடன் தொடா்பில் இருந்த உறவினா்கள் உள்ளிட்ட 248 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் முடிவுகள் இன்னமும் வெளிவராத நிலையில், அந்த ஆசிரியை, அவரது குடும்பத்தினருடன் தொடா்பில் இருந்தவா்கள் குறித்து சுகாதாரத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.