உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் பயிற்சிக் கட்டடம்: முதல்வா் திறந்துவைத்தாா்
நீலகிரி மாவட்டத்தில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 4.50 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட செவிலியா் பயிற்சிக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தி
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், நீலகிரி மாவட்டத்தில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 4.50 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட செவிலியா் பயிற்சிக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
இதைத்தொடா்ந்து உதகையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாவட்ட ஆட்சியா் நேரில் குத்துவிளக்கேற்றி வைத்து பயிற்சி பள்ளிக் கட்டடத்தைப் பாா்வையிட்டாா். பின்னா், மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், உதகை நகராட்சித் தலைவா் எம்.வாணீஸ்வரி, துணைத் தலைவா் ஜே.ரவிகுமாா், உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.