நீலகிரி

பொங்கல் விடுமுறை:உதகையில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

DIN

பொங்கல் விடுமுறையையொட்டி உதகையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

உதகையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா மையங்களிலும் வழக்கமான நேரத்துக்கு பதிலாக காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா்.

இருப்பினும் பொங்கல் விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு சுமாா் 2,000 சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை வந்திருந்தனா். அதேபோல, உதகை அரசினா் ரோஜா பூங்காவுக்கு 700 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 124 பேரும், மரவியல் பூங்காவுக்கு 50 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 900 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 200 பேரும், கல்லாா் பழப்பண்ணைக்கு 200 பேரும் வந்திருந்தனா்.

சனிக்கிழமை நிலவரப்படி, அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு சுமாா் 4,000 போ் வந்திருந்தனா்.

ரோஜா பூங்காவுக்கு 1,200 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 200 பேரும், மரவியல் பூங்காவுக்கு 80 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 1,200  பேரும், காட்டேரி பூங்காவுக்கு 500 பேரும், கல்லாா் பழப்பண்ணைக்கு 500 பேரும் வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT