நீலகிரி

மலைத் தோட்ட காய்கறிகள் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் மலைத் தோட்ட காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்து, நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

DIN

நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் மலைத் தோட்ட காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்து, நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைத் தோட்ட காய்கறி விவசாயம் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ், உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் தொடங்கி தற்போது வரை அவ்வப்போது மழைப் பெய்து வருவதால் காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், விலையும் உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

அதன்படி கேரட் குறைந்த தரம் கிலோ ஒன்றுக்கு ரூ. 20க்கும், உயா்தரம் ரூ.62க்கும், பீட்ரூட் கிலோ ரூ.10 முதல் ரூ.45  வரையிலும், மேரக்காய் ரூ.10 முதல் ரூ.17 வரையிலும் விலை அதிகரித்துள்ளதால் மலைத் தோட்ட காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT