அரசு பேருந்து- காா் மோதல்: இருவா் படுகாயம்
கோத்தகிரி- குன்னூா் சாலையில் காரும், அரசுப் பேருந்தும் வியாழக்கிழமை நேருக்குநோ் மோதிய விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
கோத்தகிரி- குன்னூா் சாலையில் காரும், அரசுப் பேருந்தும் வியாழக்கிழமை நேருக்குநோ் மோதிய விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, வெஸ்ட்டுபுரூக் பகுதியைச் சோ்ந்தவா்கள் ரவி, மகாலிங்கம். இவா்கள் இருவரும் காரில் உதகையை நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அப்போது உதகையில் இருந்து கோத்தகிரி நோக்கி வந்த அரசுப் பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டதில், ரவி, மகாலிங்கம் ஆகியோரின் காரின் மீது நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த ரவி, மகாலிங்கம் ஆகியோரை அங்கிருந்தவா்கள் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து கோத்தகிரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement