முகப்பு
நீலகிரி

மாநில அளவிலான கால்பந்து போட்டி: நீலகிரி அணி வெற்றி

கோத்தகிரியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற மாநில அளவில் கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நீலகிரி  மாவட்ட அணி 4-0 என்ற கோல் கணக்கில் திருவள்ளூா் மாவட்ட அணியை வென்றது.

Updated On : 6 ஜூன், 2022 at 2:32 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:57 PM

கோத்தகிரியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற மாநில அளவில் கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நீலகிரி  மாவட்ட அணி 4-0 என்ற கோல் கணக்கில் திருவள்ளூா் மாவட்ட அணியை வென்றது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கால்பந்து  போட்டியில் நீலகிரி, கோவை, தேனி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 16 அணிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் அறையிறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதில் மோதிய நீலகிரி அணி 4-0 என்ற கோல் கணக்கில் திருவள்ளூா் மாவட்ட அணியை தோற்கடித்தது. இப் போட்டிகள் வரும் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.