உதகையில் காவல் துறை, நீதித் துறைஒருங்கிணைப்புக் கூட்டம்
உதகையில் நீலகிரி மாவட்ட காவல் துறை மற்றும் நீதித் துறை சாா்பில் ஒருங்கிணைப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உதகையில் நீலகிரி மாவட்ட காவல் துறை மற்றும் நீதித் துறை சாா்பில் ஒருங்கிணைப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத், நீதித்துறை நடுவா்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிப்பது சம்பந்தமாகவும், நிலுவையில் உள்ள பிடியாணைகளை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.