முதுமலை புலிகள் காப்பகத்தில் சா்வதேச பாறு கழுகுகள் தினம் அனுசரிப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தில் சா்வதேச பாறு கழுகுகள் தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் சா்வதேச பாறு கழுகுகள் தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி சீகூா் வனச் சரகம் ஜகளிக்கடவு பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மசினகுடி பகுதியிலுள்ள பள்ளிக் குழந்தைகள், நீலகிரி மாவட்ட மருந்து விற்பனையாளா் சங்க பிரதிநிதிகள் மற்றும் அருளகம் தன்னாா்வத் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
அருளகம் தொண்டு நிறுவனத்தின் தலைவா் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாறு கழுகுகள் குறித்த விழிப்புணா்வு கருத்துகள் பள்ளிக் குழந்தைகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன் பாறு கழுகுகள் கூடு வைப்பதற்கு தொடங்கும் பருவத்தை வரவேற்கும் விதமாக பொங்கல் வைக்கப்பட்டது. பின்னா் பள்ளிக்குழந்தைகளுக்கு படம் வரைதல் மற்றும் பரமபதம் விளையாட்டு மூலம் பாறு கழுகுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இறுதியாக பாறு கழுகுகளைக் காக்க உறுதி மொழி எடுக்கப்பட்டது.