நீலகிரி

தெரு நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு

DIN

உதகையில் தெரு நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழந்தது.

உதகை அருகேயுள்ள வனப் பகுதியிலிருந்து புள்ளி மான் வழி தவறி உதகை நகரப் பகுதிக்குள் திங்கள்கிழமை இரவு புகுந்தது. பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்டு மிரண்டு போன மான் அங்குமிங்கும் ஓடியது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் அந்த மானை விரட்டிச் சென்று கடித்துக் குதறின. இதில் மான் படுகாயம் அடைந்தது. அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து மானை மீட்டனா். ஆனால் சற்று நேரத்தில் அந்த மான் உயிரிழந்தது.

இதையடுத்து மானின் உடல், உதகை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வன விலங்குகளின் உணவுக்காக வனப்பகுதியில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT