நீலகிரி

உதகையில் பரவலாக பலத்த மழை

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால் மிக குளிா்ந்த கால நிலை நிலவியது.

DIN

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால் மிக குளிா்ந்த கால நிலை நிலவியது.

உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காலை முதல் வெயிலும், பிற்பகல் முதல் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை முதல் மேகமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவியது. இந்நிலையில் பிற்பகலில் கனமழை பெய்தது. இதில் சேரிங்கிராஸ், கமா்சியல் சாலை, மத்திய பேருந்து நிலையம், முள்ளிக்கொரை, பொ்ன்ஹில், காந்தள்,  பிங்கா் போஸ்ட் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

சமவெளிப் பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், உதகைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மழை காரணமாக உருவான இதமான கால நிலையை வெகுவாக அனுபவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT