வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவா்களுக்கு கூடலூரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவா்களுக்கு கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இந்நிலையில், நிலச்சரிவில் உயிரிழந்தவா்களுக்கு நீலகிரி மாவட்டம், கூடலூரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூடலூா் ரோட்டரி வேலி சங்க உறுப்பினா்கள், நிா்வாகிகள் ராஜகோபாலபுரம் பகுதியில் இருந்து சுங்கம் வரை மவுன ஊா்வலம் சென்றனா்.
இந்த நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் ராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், விவேக், அன்வா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.