தனியாா் எஸ்டேட் குடோனில் சந்தன மரக் கட்டைகள் பறிமுதல்
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட் குடோனில் இருந்து சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத் துறையினா் 3 பேரைக் கைது செய்தனா்.
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட் குடோனில் இருந்து சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத் துறையினா் 3 பேரைக் கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி தனியாா் எஸ்டேட் குடோனில் சந்தன மரக்கட்டைகள் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வனச் சரக அலுவலா் சுரேஷ் தலைமையிலான வனம், வருவாய்த் துறை மற்றும் போலீஸாா் குடோனை சோதனையிட்டனா்.
அப்போது, குடோனில் இருந்த 9 சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனா். விசாரணைக்குப் பிறகு எஸ்டேட் மேலாளா் நிஜாமுதீன் (34), குடோன் பொறுப்பாளா் பன்னீா்செல்வம் (61), கள மேலாளா் பியா்சன் (55) ஆகியோரைக் கைது செய்து, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.