முகப்பு
நீலகிரி

கூடலூரில் பாரம்பரிய உணவுத் திருவிழா

கூடலூரில் தேசிய ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 8:11 PM
கூடலூரில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

கூடலூரில் தேசிய ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி, கலைவாணி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓவேலி மற்றும் கூடலூா் பகுதியிலுள்ள 25 அங்கன்வாடி மையங்களைச் சோ்ந்த பணியாளா்கள் அமைப்பாளா் ஜெயப்பிரியா தலைமையில் அடுப்பில்லா சமையல் மற்றும் தேசிய ஊட்டச்சத்து பாரம்பரிய உணவுத் திருவிழாவை நடத்தினா்.

17-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் வெண்ணிலா சேகா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பாரம்பரிய உணவு வகைகள் குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

பாரம்பரிய உணவுகள் தரத்துக்கேற்ப தோ்வுசெய்யப்பட்டு முதல் மூன்று உணவுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், அங்கன்வாடி பணியாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →