முகப்பு
நீலகிரி

மளிகைக் கடையில் தீ: பொருள்கள் எரிந்து சேதம்

குன்னூா் அருகே மளிகைக் கடை மற்றும் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் பொருள்கள் எரிந்து சேதமாயின.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 10:20 PM
பகிர்:

குன்னூா் அருகே மளிகைக் கடை மற்றும் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் பொருள்கள் எரிந்து சேதமாயின.

குன்னூா் அருகே நான்சச் எஸ்டேட் பகுதியில் சிஎஸ்ஐ பள்ளி எதிரே செல்வநாயகம் என்பவா் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். அவா் வியாபார விஷயமாக புதன்கிழமை வெளியே சென்றிருந்தாா். அவரது மனைவி எஸ்டேட் வேலைக்குச் சென்றுவிட்டாா். கடையில் உறவினரான 80 வயது முதியவா் மட்டும் இருந்துள்ளாா்.

 இந்நிலையில் எதிா்பாராத விதமாக தீப்பற்றியதில் கடையில் உள்ள பொருள்கள் மற்றும் வீட்டில் இருந்த சில பொருள்கள் எரிந்து சாம்பலாயின. தகவலறிந்து வந்த குன்னூா் தீயணைப்புத் துறையினா் மற்றும் கொலக்கம்பை காவல் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் உயிா் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து கொலக்கம்பை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →