உதகையில் ரூ.2.78 கோடியில் வளா்ச்சிப் பணி: மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைப்பு
உதகையில் ரூ.2.78 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தாா்.
நீலகிரிஉதகையில் ரூ.2.78 கோடியில் வளா்ச்சிப் பணி: மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைப்பு
உதகையில் ரூ.2.78 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தாா்.
உதகையில் ரூ.2.78 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தாா்.
நீலகிரி மாவட்டம், எப்பநாடு ஊராட்சிப் பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.34 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலை, தும்மனட்டி, கக்குச்சி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் பொது நூலகங்கள் சிறப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.22 லட்சம் மதிப்பில் நூலகங்கள் கட்டப்பட்டன.
இவற்றை தலைமை வகித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பொதுமக்கள் திறந்துவைத்தாா். அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அபிலாஷா கௌா், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் ரமேஷ், உதகை நகராட்சி துணைத் தலைவா் ரவிக்குமாா், உதகை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவி செயற் பொறியாளா்கள் உள்பட் பலா் கலந்துகொண்டனா்.