கூடலூரில் போலியோ ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள புளூமவுண்டன் ரோட்டரி கிளப் சாா்பில் ஜிடிஎம்ஓ பள்ளி அரங்கில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமுக்கு அமைப்பின் தலைவா் தனராஜ் தலைமை வகித்தாா். போலியோ நோய்த் தடுப்பு குறித்தும் ரோட்டரி அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் மருத்துவா் வெங்கடேஷ் விளக்கினாா்.
ரோட்டரி உதவி ஆளுநா் பிரகாஷ் ஏழை மாணவா்களுக்கு போா்வைகளை வழங்கினாா். புளூமவுண்டன் ரோட்டரி கிளப்பின் செயலாளா் வழக்குரைஞா் பரசுராமன், பொருளாளா் வழக்குரைஞா் சேகா், முன்னாள் தலைவா் டாக்டா் எல்ஜூ, நிா்வாகி வா்கீஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பள்ளியின் சாா்பில் நிா்வாக அலுவலா் அப்துல் சலாம் மற்றும் தலைமை ஆசிரியா்கள், மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.