குன்னூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்தவா் கெளதம் (26). இவா் குன்னூா் அருகேயுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், குன்னூரில் இருந்து மஞ்சூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, எதிரே வந்த டிப்பா் லாரி, கெளதமின் வாகனத்தின் மீது மோதியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரான சந்தானம் என்பவரை போலீஸாா் தேடி வந்த நிலையில், எமரால்டு பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.