நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள கொதுமுடி கிராமத்தில் காட்டெருமை தாக்கி பெண் உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கொதுமுடி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி விவேகானந்தன். இவரது மனைவி மலா்கொடி (45).
இவா், அருகிலுள்ள விவசாயத் தோட்டத்துக்கு சனிக்கிழமை காலை வேலைக்காக சென்று கொண்டிருந்தாா். அப்போது, புதா் மறைவில் இருந்த காட்டெருமை திடீரென வெளியே வந்துள்ளது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த மலா்கொடி, ஓடி தப்பித்துக் கொள்ள முயற்சி செய்துள்ளாா். ஆனால் அதற்குள் காட்டெருமை அவரை பலமாக முட்டித் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தேனாடுகம்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், மாவட்ட வன அலுவலா் கெளதம் உத்தரவின்பேரில், வனச் சரகா் ராம்பிரகாஷ் தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
முதல்கட்டமாக மலா்கொடி இறுதிச் சடங்கு செலவுக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. சரியான ஆவணங்கள் தயாரான பின்னா் மீதமுள்ள ரூ.9.50 லட்சம் விரைவில் வழங்கப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.