முகப்பு
திருப்பூர்

திடக் கழிவுகளால் மண்வளத்துக்குப் பாதிப்பு: சிவன்மலை ஜேசீஸ் பள்ளி மாணவர்கள் ஆய்வு

காங்கயம் அருகே,  சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் திடக் கழிவுகளால் மண்வளத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர்

திடக் கழிவுகளால் மண்வளத்துக்குப் பாதிப்பு: சிவன்மலை ஜேசீஸ் பள்ளி மாணவர்கள் ஆய்வு

காங்கயம் அருகே,  சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் திடக் கழிவுகளால் மண்வளத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

காங்கயம் அருகே,  சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் திடக் கழிவுகளால் மண்வளத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூரில் 25-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பள்ளி மாணவ,  மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் ஆய்வு செய்து,  கட்டுரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.
இதில்,  சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களான டி.ஆர்.ரோகித் பிரணவ்,  ஏவிஆர்.அகிலன்,  எஸ்.காமேஷ்,  கே.முகமது கமல்ஷா,  எம்.வி.கிஷோர் ஆகியோர் திடக் கழிவுகளால் மண்வளத்துக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதன் மேலாண்மையும் என்னும் தலைப்பில் கே.அம்பேத்கர், கே.பிரபு ஆகிய ஆசிரியர் குழுவின் உதவியோடு ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக காங்கயத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மைப் பகுதி, சடையபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளைச் சந்தித்து, திடக் கழிவுகளால் மண்வளத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் சேகரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →