திருப்பூர்

சேவூர் அருகே சாலை விபத்தில் இருவர் சாவு

DIN

திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே லாரி, இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள் ளானதில் இருவர் புதன்கிழமை இரவு உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம், மருதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் மருதுபாண்டி(25) , வினோத்குமார் (22). இருவரும் இருசக்கர வாகனத்தில் சேவூரில் இருந்து தண்டுக்காரம்பாளையத்துக்கு  வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னே சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். 
அதேநேரத்தில் ஆலத்தூரில் இருந்து சேவூருக்கு வந்த மயில்சாமி (42) என்பவரின் இருசக்கர வாகனத்தில் மோதி,  முன்னால் சென்ற லாரியில் சிக்கியது. இதில், பலத்த காயமடைந்த மருதுபாண்டி, வினோத்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மற்றோர் இருசக்கர வாகனத்தில் வந்த மயில்சாமி காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT