இலவச சதுரங்கப் பயிற்சி வகுப்பு துவக்கம்
உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள கிளை நூலகத்தில் (எண்-2) பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சதுரங்கப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள கிளை நூலகத்தில் (எண்-2) பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சதுரங்கப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
இதற்கு நூலகர் கணேசன் தலைமை வகித்தார். நூலகர் மகேந்திரன் வரவேற்றார். நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் வி.கே.சிவகுமார் சதுரங்கப் பயிற்சியைத் தொடக்கிவைத்தார். சதுரங்கப் பயிற்சியாளர் ரா.ரவி மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்தார். இதில், உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் ராமதாஸ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூலகர்கள் செல்வராணி, அருள்மொழி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.