முகப்பு
திருப்பூர்

அரசு ஆவணங்களை பறித்துச் சென்றவர் கைது

அவிநாசியில்  அரசு ஆவணங்களை பறித்துச் சென்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 

Updated On : 29 மார்ச், 2018 at 8:45 AM
பகிர்:

அவிநாசியில்  அரசு ஆவணங்களை பறித்துச் சென்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
  அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைத் துறை பிரிவில் வட்ட ஆவண வரைவாளராகப் பணியாற்றி வருபவர் கஸ்தூரி (27). இவர் புதன்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவிநாசிலிங்கம்பாளையத்தை கேபிள் ஆப்பரேட்டர் தேவேந்திரன் (55) அலுவலகத்துக்கு வந்துள்ளார்.  அவர்,  தனது உறவினர் நடராசன் கொடுத்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டு அவரை மிரட்டியுள்ளனார். அதற்கு அரசு அலுவலர்கள்,  கோப்புகளுக்கு உரியவரை வரச்சொல்லுங்கள் என்று கூறியதாகக் கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த தேவராஜன்  அரசு அலுவலரைப் பணிசெய்யவிடாமல் தடுத்தும், அரசு ஆவணக் கோப்புகளை பறித்துக்கொண்டும் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.  இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேவேந்திரனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.