முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் பெண்ணிடம் நகைப்பறிப்பு

அவிநாசியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 22 மே, 2018 at 12:37 AM
பகிர்:

அவிநாசியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அவிநாசி, சின்னேரிபாளையம் அபிராமி கார்டன் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மனைவி தமிழ்ச்செல்வி (45). இவர், தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளார். அவிநாசி, கைகாட்டிப்புதூர் அருகே செல்லும்போது, இவர்கள் இருசக்க வாகனத்துக்கு பின்னால் வந்த இரு நபர்கள் தமிழ்ச்செல்வி அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.