தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை
தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர், ஆத்துப்பாளையம், பெஸ்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு அதன் நிறுவனத் தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தலைமை வகித்தார். திருப்பூர் மாநகரக் காவல் துணை ஆணையர் உமா குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார்.
இதில், 120 தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை, விடுமுறை எடுக்காமல் 100 சதவீதம் வருகை தந்த தொழிலாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, தொழிலாளர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், நிர்வாக இயக்குநர் ராஜ்குமார், இணை நிர்வாக இயக்குநர் தனபால், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.