முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் முருங்கைக் காய் வரத்து குறைவு

வெள்ளக்கோவில் தனியார் கொள்முதல் மையத்தில் முருங்கைக் காய் வரத்து ஞாயிற்றுக்கிழமை குறைந்து இருந்தது. 

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:39 AM
பகிர்:

வெள்ளக்கோவில் தனியார் கொள்முதல் மையத்தில் முருங்கைக் காய் வரத்து ஞாயிற்றுக்கிழமை குறைந்து இருந்தது. 
வெள்ளக்கோவில் முத்தூர் சாலை, கொங்கு நகரில் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தனியார் முருங்கைக் காய் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது. 
கடந்த வாரம் 30 டன் வரத்து இருந்த நிலையில், இந்த வாரம் 20 டன் முருங்கைக்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. 
இதில், மர முருங்கைக் காய் கிலோ ரூ. 6க்கும், செடி முருங்கைக் காய் கிலோ ரூ. 10க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. இது கடந்த வாரத்தைவிடக் கிலோவுக்கு ரூ. 2 உயர்வாகும். 
வரும் வாரங்களில் வரத்து மேலும் குறைய வாய்ப்புள்ளதாகச் சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. 
வரத்து குறைந்தால், தேவை அதிகரித்து விலை சற்று உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.