திருப்பூர்

மது, புகையிலை விற்பனை:  4 பேர் கைது

DIN

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை, மதுபானம் விற்பனை செய்ததாக 4 பேரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
திருப்பூர், பாளையன்காடு, கொங்கு பிரதான சாலை, வீரபாண்டி ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை அருகே மதுபானம் விற்பனை செய்ததாக முத்துகுமார் (39), அருண்(24), முத்துகுமார்(38) ஆகியோரை மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
அதே போல், காசிபாளையத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக விஜய் (20) என்பவரை ஊரக காவல் துறையினர் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

அக்னி நட்சத்திரம்: வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரருக்கு தாராபிஷேகம்

திருப்பத்தூா் கிளைச் சிறையில் ஆட்சியா்,எஸ்.பி. ஆய்வு

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருப்பணி தொடக்கம்

இலவச கண் சிகிச்சை முகாம்

SCROLL FOR NEXT