திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை, மதுபானம் விற்பனை செய்ததாக 4 பேரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூர், பாளையன்காடு, கொங்கு பிரதான சாலை, வீரபாண்டி ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை அருகே மதுபானம் விற்பனை செய்ததாக முத்துகுமார் (39), அருண்(24), முத்துகுமார்(38) ஆகியோரை மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே போல், காசிபாளையத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக விஜய் (20) என்பவரை ஊரக காவல் துறையினர் கைது செய்தனர்.