திருப்பூர்

குன்னத்தூரில் தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி: மனைவி சாவு

DIN

குன்னத்தூர் அருகே  சின்னையகவுண்டம்பாளையத்தில் தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், மனைவி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
குன்னத்தூர் அருகே ஆதியூர் சின்னையகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் நூல் வியாபாரி ரவிசங்கரன் (45). இவரது மனைவி மாதேஸ்வரி(39). இவர்களுக்கு நந்தினி (16), தமிழரசி (13) என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் நந்தினி 11ஆம் வகுப்பும், தமிழரசி  8 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கணவன், மனைவி இருவரும் சாணி  பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் மாதேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 இதையடுத்து அருகிலிருந்தவர்கள் ரவிசங்கரை மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச் சம்பவம் குறித்து குன்னத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT