திருப்பூர்

கிணற்றுக்குள் இருசக்கர வாகனங்கள்

DIN


வெள்ளக்கோவில்:  மயில்ரங்கம் அருகே பொதுக் கிணற்றுக்குள் கிடந்த இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.
மயில்ரங்கம் அருகே அமராவதி ஆற்றோரத்தில் பொதுக் கிணறு உள்ளது.  இக்கிணற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கிணற்றில் தற்போது நீர்மட்டம் குறைந்து வருகிறது. நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், கிணற்றுக்குள் இரண்டு இருசக்கர வாகனகள், சைக்கிள் கிடப்பது ஊர் மக்களுக்கு தெரியவந்தது.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் அவற்றை மீட்டனர். வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை திருட்டு வாகனமாக இருக்கலாமெனத் தெரிகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT