திருப்பூர்

திருமணமான இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

வெள்ளக்கோவிலில் திருமணமான இளம்பெண்தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
தாராபுரம் சாலை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (27). நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சங்கரண்டாம்பாளையத்தை அடுத்த வேலப்பம்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் மகள் மோனிஷா (22). இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து நான்கு வாரங்கள் ஆகிறது. 
இந்நிலையில் காமராஜபுரம் கணவர் வீட்டில் தனியாக இருந்த மோனிஷா மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை.  தாராபுரம் கோட்டாட்சியர், காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT