திருப்பூர்

திருமுருகன்பூண்டி பேரூராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

DIN

அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, திருமுருகன்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தேவராயன்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் 
ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட தேவராயன்பாளையம் நியாயவிலைக் கடை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலாளர் அபுசாலி தலைமை வகித்தார்.
இதில், குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தி வாரம் இருமுறை குடிநீர் வழங்க வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த வேண்டும். சொத்து வரி, குடிநீர்க் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 
தேவராயன்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் உடனடியாகச் சீரமைக்க வேண்டும். தெருவிளக்குகளைச் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT