திருப்பூர்

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

DIN


கர்நாடகத்தில் ஆட்சியைக் கலைக்க பாஜக முயற்சிப்பதாகக் கூறி திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
திருப்பூர் குமரன் சிலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.இதில், பங்கேற்ற அக்கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், கோபால்சாமி, ராமசாமி, அனுஷம் வேலுசாமி, சித்திக், துணைத் தலைவர்கள் கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தாராபுரத்தில்...
அதே போல தாராபுரம் காந்தி சிலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தென்னரசு தலைமை வகித்தார். இதில், மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தாராபுரம் காங்கிரஸ் நகர தலைவர் குறிஞ்சி செந்தில்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் உடுமலை ஜனார்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT