திருப்பூர்

தூரி விழுந்து விபத்து: குழந்தை உள்பட இருவர் காயம்

DIN

அவிநாசி அருகே உள்ள கருவலூரில் தேர்த் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த தூரி, வியாழக்கிழமை இரவு கீழே விழுந்ததில் குழந்தை உள்பட இருவர் பலத்த காயமடைந்தனர்.
கருவலூர் மாரியம்மன் கோயில் தேர்திருவிழாவையொட்டி, அப்பகுதியில் ஏராளமான விளையாட்டு தூரிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், தரைமட்ட நாற்காலி தூரியில் 25-க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை இரவு விளையாடினர். இந்நிலையில், திடீரென தூரி பழுதடைந்து, ஒரு நாற்காலி  மட்டும் கழன்று கீழே விழுந்தது. இதில் கோவையைச் சேர்ந்த கோபால் (எ) வேணுகோபால், ஒரு குழந்தை ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT