திருப்பூர்

உரிமையியல் நீதிமன்றங்களுக்கு ஜூன் 1 வரை கோடை விடுமுறை

DIN

திருப்பூர் மாவட்டத்தில் உரிமையியல் நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரையில் கோடை கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 இதனிடையே, அவசர குற்ற வழக்குகளை விசாரிக்க மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி தலைமையில் கீழ்க்கண்ட தேதிகளில் கோடை விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும்.
 ஜாமீன் அல்லது முன்ஜாமீன் தொடர்பாக மே 3, 10, 17, 24, 28 ஆம் தேதிகளில் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் மீதான விசாரணை முறையே மே 7, 14, 21, 28, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
 இத்தகவல் மாவட்ட நீதிமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT