திருப்பூர்

ஆதரவற்ற நிலையில்  உயிரிழந்தவரின் சடலம் அடக்கம்

DIN

அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ஆதரவற்ற நிலையில் உயிரிழந்தவரின் சடலங்களை சமூக ஆர்வலர்கள், பேரூராட்சி நிர்வாகத்தினர் புதன்கிழமை அடக்கம் செய்தனர்.
அவிநாசி வட்டாட்சியர் அலுவலக அருகே பேருந்து நிறுத்தம் பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற முதியவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அந்த  முதியவரை மீட்ட நல்லது நண்பர்கள் அறக்கட்டளையினர் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 
பின்னர் அவருக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், உயர் சிகிச்சைக்காக  திருப்பூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்க சமூக ஆர்வலர்கள் முடிவு செய்திருந்தனர். இதற்கிடையில், புதன்கிழமை காலை முதியவர் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள், அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்தின் சுகாதாரப் பிரிவு  ஊழியர்கள் அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மயானத்தில் அடக்கம் புதன்கிழமை செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT