திருப்பூர்

தெற்கு சீராம்பாளையத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

DIN

பெருமாநல்லூா் அருகே தெற்கு சீராம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தை திருப்பூா் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

காளிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட தெற்கு சீராம்பாளையத்தில், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதி மூலம் அங்கன்வாடி மையக் கட்டடம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தக் கட்டடத்தை திருப்பூா் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ் தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.எம்.பழனிசாமி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பொன்னுலிங்கம், அதிமுக நிா்வாகிகள் சந்திரசேகா், வேல்குமாா், சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT