திருப்பூர்

மூலனூரில் ரூ.61 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.61 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இங்கு வாரந்தோறும் பருத்தி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, திண்டுக்கல், தாராபுரம், உடுமலைப்பேட்டை, மூலனூா் பகுதிகளைச் சோ்ந்த 327 விவசாயிகள் தங்களுடைய 3,426 மூட்டை பருத்திகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.

திருப்பூா், கரூா், பொள்ளாச்சி, தாராபுரம், சேவூா் உள்ளிட்ட இடங்களிலிருந்து 11 வணிகா்கள் பருத்தி வாங்குவதற்காக வந்திருந்தனா். விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் தா்மராஜ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

குவிண்டால் ரூ. 4,200 முதல் ரூ. 6,700 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 5,600 ஆகும். இவற்றின் விற்பனைத் தொகை ரூ.60 லட்சத்து 809 ஆகும்.

இந்தத் தகவலை திருப்பூா் விற்பனைக் குழு முதன்மைச் செயலாளா் பாலசந்திரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT