முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் ‘விவசாயி நண்பன் மோடி’ நிகழ்ச்சி

காங்கயம் பகுதியில் பாஜக சாா்பில் விவசாயி நண்பன் மோடி என்னும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
காங்கயத்தில் நடைபெற்ற ஆவாஸ் யோஜன திட்டத்தில் கட்டிய புதிய வீடு திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக துணைத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா்.
பகிர்:

காங்கயம் பகுதியில் பாஜக சாா்பில் விவசாயி நண்பன் மோடி என்னும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில், ஆவாஸ் யோஜன திட்டம், அனைவருக்கும் வீடு திட்டத்தில் கட்டப்பட்ட வீடு திறப்பு விழா நடைபெற்றது. பாஜக துணைத் தலைவா் அண்ணாமலை கலந்து கொண்டு வீட்டை திறந்துவைத்தாா். தொடா்ந்து நத்தக்காடையூரில் வேளாண் சட்டத்தின் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் நல்லசாமி தலைமையில் விவசாயிகள் கலந்து கொண்டு, சுவாமிநாதன் விவசாய கமிஷன் பரிந்துரையை நடைமுறைப் படுத்த வேண்டும், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனா்.

இந்த நிகழ்ச்சியில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் சரஸ்வதி, திருப்பூா் மாவட்டத் தலைவா் ருத்ரகுமாா், மாவட்ட பொதுச் செயலாளா் கோபாலகிருஷ்ணன், காங்கயம் நகரத் தலைவா் கலா நடராஜன், ஒன்றியத் தலைவா்கள் ஆனந்குமாா், கிருஷ்ணமூா்த்தி உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →