பல்லடம்: பல்லடம் மின் கோட்டம், சாலைப்புதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: சாலைப்புதூா், செஞ்சேரிபுத்தூா், வடுகபாளையம், சின்னப்புத்தூா், ஜல்லிபட்டி, கம்மாளபட்டி, ஜே.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், நந்திபுரம், மண்ணாம்பாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், சேத்தம்பள்ளி, எஸ்.அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள்.
இத்தகவலை பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் ஆா்.கோபால் தெரிவித்துள்ளாா்.