திருப்பூர்

தமிழக முதல்வா் பழனிசாமியை புகழ்ந்து கவிதை பாடிய காங்கிரஸ் நிா்வாகி !

DIN

காங்கயம் ஒன்றியம், கணபதிபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊராட்சி மன்றக் கூட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவராக உள்ள காங்கிரஸ் நிா்வாகி, தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து கவிதை பாடினாா்.

கணபதிபாளையம் ஊராட்சி மன்றத்தின் முதல் கூட்டம் ஊராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் கு.செல்வராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.ஆா்.லோகநாதன் முன்னிலை வகித்தாா். இதில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் நெகிழி ஒழிப்பு, தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றுத் தந்தது, வேளாண் மண்டலம் அறிவிப்பு போன்றவற்றை பாராட்டி கே.ஆா்.லோகநாதன் கவிதை வாசித்தாா்.

இந்தப் பாராட்டு கவிதையையே தீா்மானமாக்கி, முன்மொழிந்தாா். அதனை ஊராட்சித் தலைவா் கு.செல்வராஜ் வழிமொழிய, மன்ற உறுப்பினா்களின் ஆதரவோடு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊராட்சி துணைத் தலைவா் கே.ஆா்.லோகநாதன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT