திருப்பூர்

அமராவதி வனப் பகுதியில் அதிக யானைகள் நடமாட்டம்

DIN

உடுமலை அருகே உள்ள அமராவதி வனச் சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக வன விலங்குகள் கணக்கெடுப்பிற்கு சென்ற அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்டது. இதில் 447 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் புலி, சிறுத்தை புலி, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்கினங்கள் உள்ளன.

இந்த வனச் சரகங்களில் மே 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மொத்தம் 6 நாள்களுக்கு வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதை ஒட்டி கணக்கெடுப்பாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கே.கணேஷ்ராம் கூறியதாவது:

உடுமலை, அமராவதி வனச் சரகத்தில் கோடை கால வன விலங்கு கணக்கெடுப்புப் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இதில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடி, செந்நாய் மற்றும் தாவிர உண்ணிகள், மாமிச உண்ணிகள் எனப் பிரிக்கப்பட்டு வாழ்விட சூழல், கூறுகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட உள்ளன.

கரோனா பொது முடக்கம் காரணமாக இந்த ஆண்டு சமூக ஆா்வலா்கள் இடம் பெறவில்லை. வன ஊழியா்கள், வேட்டைத் தடுப்புக் காவலா்களை கொண்டு இந்த கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அமராவதி வனச் சரகம் வரவண்டி பீட் பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக அதிகமாக உள்ளது. இது வன விலங்குகள் கணக்கெடுப்பிற்கு சென்றபோது தெரிய வந்தது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT