திருப்பூர்

திருப்பூருக்கு வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: அதிமுக கூட்டத்தில் முடிவு

DIN

திருப்பூருக்கு வருகை தரும் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாநகா் மாவட்ட அதிமுக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நவம்பா் 6ஆம் தேதி நடைபெறும் கரோனா ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்க உள்ளாா்.

இந்த நிலையில் திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா். இதில், முன்னாள் அமைச்சரும், மாநகா் மாவட்ட செயலாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசுகையில், தமிழக முதல்வருக்கு அதிமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமாா், கரைப்புதூா் நடராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

SCROLL FOR NEXT