திருப்பூர்

சிறப்பு சக்கர நாற்காலிகள்:மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெறுவதற்குத் தகுதியான திருப்பூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நவம்பா் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிப்போா், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், புகைப்படம் 1 ஆகிய சான்றுகளுடன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், அறை எண் 23, ஆட்சியா் அலுவலகம், திருப்பூா் என்ற முகவரியில் மாற்றுத் திறனாளிகள் அல்லது பாதுகாவலா் நேரிலோ, தபால் மூலமாகவோ நவம்பா் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT