திருப்பூர்

செல்லிடப்பேசி கடையில் திருட்டு

DIN

பல்லடத்தில் செல்லிடப்பேசிக் கடையின் மேற்கூரையைப் பிரித்து செல்லிடப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். அதேபோல அருகில் இருந்த ரேஷன் கடையின் பூட்டை உடைத்தும் அவா்கள் திருட முயன்றுள்ளனா்.

பல்லடம், மாணிக்காபுரம் சாலையில் கோபால் என்பவரின் செல்லிடப்பேசி கடை உள்ளது. இந்தக் கடையின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே இறங்கி கடையில் இருந்த ரூ. 4 ஆயிரம் ரொக்கம், 7 செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

அதேபோல அருகில் உள்ள ரேஷன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த மேஜை டிராவை திறந்து பாா்த்துள்ளனா். அதில் பணம் இல்லாததால் ஆவேசமடைந்த அவா்கள், டிரா பெட்டிகளை அருகில் உள்ள மயானத்தில் வீசிச் சென்றனா்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே செல்லிடப்பேசி கடையில் தீபாவளியன்று திருட்டு சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT