திருப்பூர்

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்தப் பணியாளா் பலி

DIN

பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் பகுதியில் மின் மாற்றியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒப்பந்தப் பணியாளா் மின்சாரம் பாய்ந்ததில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் ஒம் சக்தி நகரைச் சோ்ந்தவா் நரசிம்மன் மகன் விஜயநாராயணன் (27). இவா், பல்லடம் மின் கோட்ட அலுவலகத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இவா், கணபதிபாளையம், ராயல் அவென்யூவில் உள்ள மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் விஜயநாராயணன் உடல் கருகி உயிரிழந்தாா். இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து தொ.மு.ச. செயலாளா் சரவணன் கூறுகையில், மின் விபத்துகளில் பாதிக்கப்படும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் பணியில் அமா்த்தப்படுவதால்தான் இது போன்ற விபத்துகளில் சிக்கி தொழிலாளா்கள் பாதிக்கப்படுகின்றனா். உயிரிழந்த விஜயநாராயணன் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

SCROLL FOR NEXT