விபத்துக்குள்ளான வேன் 
திருப்பூர்

அவிநாசியில் வேன் மோதி தொழிலாளி பலி: இரு பெண்கள் படுகாயம்

அவிநாசி அருகே சனிக்கிழமை  இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு தொழிலாளி உயிரிந்தார். மேலும் நடந்து சென்ற இரு பெண்கள் படுகாயமடைந்தனர்.

DIN

அவிநாசி அருகே சனிக்கிழமை  இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு தொழிலாளி உயிரிந்தார். மேலும் நடந்து சென்ற இரு பெண்கள் படுகாயமடைந்தனர்.

நம்பியூர் வெள்ளங்கோவில்பாளையம் கருப்பன் மகன் மனோகரன்(30). சர்வீஸ் ஸ்டேசன் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்  இவர் சனிக்கிழமை மாலை தனது முதலாளி ஆறுமுகத்துடன்(64), இருசக்கர வாகனத்தில் அவிநாசிலிங்கம்பாளையம் சிறு பாலம் அருகே வரும் போது, அவிநாசி நோக்கி வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் அவ்வழியாக நடந்து சென்ற இரு பெண்கள் மீது மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த மனோகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நடந்து சென்ற அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்த செல்வராஜ் மனைவி லட்சுமி(41), செல்வராஜ் மகள் சந்தியா(18) ஆகியோர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT